சிவப்பு கோடு மருந்துகள் – மருந்துவர் பரிந்துரை அவசியம்
தமிழ்நாடு அரசு – மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு:
🔴 சிவப்பு கோடு மருந்துகள் என்றால் என்ன?
மருந்துப் பெட்டியில் சிவப்பு கோடு (Red Line) கொண்ட மருந்துகள்.
பெரும்பாலும் Antibiotic வகை மருந்துகள் இதில் அடங்கும்.
⚠️ முக்கிய அறிவுரை
சிவப்பு கோடு மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு (Prescription) இல்லாமல் வழங்கப்படாது.
❌ தவறான பயன்பாட்டின் விளைவுகள்
மருந்துக்கு எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) உருவாகும்.
சாதாரண நோய்களுக்கும் மருந்துகள் வேலை செய்யாமல் போகும்.
உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும்.
எதிர்காலத்தில் தீவிர நோய்களுக்கு சிகிச்சை கடினமாகும்.
✅ சரியான நடைமுறை
நோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
மருத்துவர் குறிப்பிட்ட மருந்து, அளவு, நாட்கள் முறையாக பின்பற்றவும்.
பாதி சிகிச்சை செய்து மருந்தை நிறுத்த வேண்டாம்.
🩺 அரசு வேண்டுகோள்
“சிவப்பு கோடு மருந்துகள் – கவனம் அவசியம்”
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்வது ஆபத்தானது.
இந்த தகவலை குடும்பத்தினர், நண்பர்கள், பொதுமக்கள் அனைவரிடமும் பகிரவும்.

Comments
Post a Comment